தெண்டுல்கர் பற்றி விமர்சனம்
காம்பிர் மீண்டும் "நம்பர்-1'
மீண்டும் உலக கோப்பை
தற்போதுள்ள இலங்கை அணிக்கு வரும் 2011ல் உலக கோப்பை (50 ஓவர்) வெல்வதற்கு சிறப்பான வாய்ப்பு உள்ளது என்கிறார் அணியின் கேப்டன் சங்ககரா.
வீரர்கள் வயது மோசடி செய்தால் 2 ஆண்டு தடை
தோனி சந்திப்பை தவிர்த்தது ஏன்?
கடந்த ஆண்டு போல் தேவையில்லாமல் சர்ச்சை ஏற்படுவதை தவிர்க்கவே, கேப்டன் தோனியை இம்முறை சந்திக்கவில்லை,'' என, கான்பூர் ஆடுகள பராமரிப்பாளர் ஷிவ் குமார் தெரிவித்துள்ளார்.
எதிர்பார்த்தது நடந்தது:
இந்திய அணி முதலில் பேட் செய்த போது சேவக் முதல் 19 பந்துகளில் வழக்கத்திற்கு மாறாக 3 ரன்கள் தான் எடுத்திருந்தார். ஆனால் முதல் ஒருமணி நேரத்திற்கு பின் பேட்டிங் எளிதாக இருக்கும் என நான் எதிர்பார்த்திருந்தேன். முதலில் தப்பி பிழைத்த சேவக், பின் இலங்கை பந்துவீச்சை விளாசித் தள்ளி, சதம் கடந்தார்.
கவாஸ்கர் பாராட்டு:
போட்டி நடந்து கொண்டிருந்த போது வர்ணனையாளர் அறைக்கு ஒருமுறை சென்றேன். அப்போது அங்கு இருந்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கர்,"இந்தியாவில் உள்ள சிறந்த டெஸ்ட் ஆடுகளங்களில் இதுவும் ஒன்று,' என தெரிவித்தார். இந்த ஒரே பாராட்டு எனக்கு போதும். அது நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கும்.
அன்பளிப்பு பிரச்னை:
கடந்த ஆண்டு போட்டி முடிந்ததும் தோனி தந்த அன்பளிப்பு குறித்து பிரச்னை ஏற்பட்டது. அந்த சம்பவம் இன்னும் என்மனதில் அப்படியே உள்ளது. அதனால் தான் இம்முறை தோனியை சந்திப்பதை தவிர்த்தேன். நான்கு நாட்களில் போட்டி முடிந்தும், எவ்வித பிரச்னையும் இல்லாமல் இருந்தது குறித்து மகிழ்ச்சி. இம்முறை அன்பளிப்பு கிடைத்ததா இல்லையா என்பது குறித்து கேட்கவேண்டாம். எனக்கு எதுவும் தெரியாது.
3-வது டெஸ்டுக்கு கம்பீர் இல்லை
நம்பர் ஒன் இடத்தை பிடித்தது இந்தியா
கான்பூர் டெஸ்டில் ஹர்பஜன் சிங், பிரக்யான் ஓஜா சுழலில் அசத்த, இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இதையடுத்து டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றது.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் இந்திய அணி முதன் முறையாக முதலிடத்தை பிடித்துள்ளது. இந்தியா வந்துள்ள இலங்கை அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது.
ஆமதாபாத்தில் நடந்த முதல் போட்டி "டிரா' ஆனது. இரண்டாவது டெஸ்ட் கான்பூரில் நடந்தது. இதில் சேவக், காம்பிர், டிராவிட் ஆகியோர் பேட்டிங்கில் அசத்தி சதம் அடிக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 642 ரன்கள் குவித்தது.
பின்னர் பவுலிங்கில் ஸ்ரீசாந்த்தின் "மிரட்டலான' வேகத்தில் அதிர்ந்துபோன இலங்கை அணி முதல் இன்னிங்சில் 229 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, "பாலோ-ஆன்' பெற்றது. மூன்றாம் நாள் ஆட்டநேர இறுதியில், இலங்கை அணி இரண்டாம் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 57 ரன்கள் எடுத்து 356 ரன்கள் பின்தங்கியிருந்தது.
சமரவீரா ஆறுதல்: இன்று ( 27 ம் தேதி ) நான்காம் நாள் ஆட்டம் நடந்தது. போட்டி துவங்கிய சிறிது நேரத்தில் மாத்யூஸ் (15) வெளியேறினார். பின் பிரசன்னா (29), ஹெராத் (13), முரளிதரன் (29) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுமுனையில் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சமரவீரா அரைசதம் கடந்து ஆறுதல் அளித்தார்.
இன்னிங்ஸ் வெற்றி: ஒன்பதாவது விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்த நிலையில் மெண்டிஸ் (27), யுவராஜிடம் சிக்கினார். பின் வந்த வெலகேதராவை ஓஜா (4) சுழலில் அவரிடமே "கேட்ச்' கொடுத்து திரும்பினார். சமரவீரா (78) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 269 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி, இன்னிங்ஸ் மற்றும் 144 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் ஹர்பஜன் 3, பிரக்யான் ஓஜா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக இந்தியாவின் ஸ்ரீசாந்த் தேர்வு செய்யப்பட்டார்.
"நம்பர்-1' இந்தியா: இலங்கைக்கு எதிரான கான்பூர் டெஸ்ட் வெற்றியின் மூலம் இந்திய அணி சர்வதேச டெஸ்ட் ரேங்கிங்கில் முதன் முறையாக முதலிடத்துக்கு (122) முன்னேறி அசத்தியுள்ளது. அடுத்த இடத்தில் சிறிய வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவும் (122), மூன்றாவது இடத்தை இலங்கை (117) அணியும் பெற்றுள்ளது.
100வது வெற்றி : இந்திய அணியின் டெஸ்ட் வரலாற்றில் கான்பூர் வெற்றி, 100 வது வெற்றியாக அமைந்துள்ளது. இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 100வது வெற்றி பெற்றுள்ள அணிகள் வரிசையில் இந்திய அணி 6 வது இடத்தை பிடித்துள்ளது
சச்சினுக்கு சிறப்பு விருது
இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) சார்பில் சச்சின், டிராவிட்டுக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.
அதிரடி தான் சேவக் "ஸ்டைல்
டெஸ்ட் ரேங்கிங்: சச்சின் முன்னேற்றம்
கான்பூர் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகம்
அசார் தடையை நீக்க கோரிக்கை
ஐ.பி.எல். போட்டி உலக அளவில் பிரபலமாகும்
30 ஆயிரம் ரன்கள் குவித்து சச்சின் உலக சாதனை
நியூசி., விக்கெட் கீப்பர் உலக சாதனை
டெஸ்ட் போட்டி: 7 சதவீதமாக குறைந்த ரசிகர்கள்
இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளுக்கு சுத்தமாக வரவேற்பில்லை. 5 நாட்கள் நடக்கும் இப்போட்டிகளை காண 7 சதவீத ரசிகர்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்துள்ளனர்.
2011 உலக கோப்பையை தெண்டுல்கர் பெற்று தருவார்
ஐ.பி.எல்., தொடரில் புதிய அணிகள்
21வது ஆண்டில் சச்சின்
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இன்று தனது 21வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார் "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின். இந்த இனிமையான தருணத்தில் இந்திய அணிக்கு உலக கோப்பை(2011) பெற்று தருவதை இவர் இலக்காக கொள்ள வேண்டுமென கவாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒப்பிட முடியாது:
63 வயதில் சதம் விளாசி கின்னஸ் சாதனை
உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் சதம் அடித்த 63 வயது இந்திய வீரர், கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
கிரிக்கெட்டில் இனவெறியை தடுக்க புதிய விதிமுறைகள்