2012-ம் ஆண்டில் உமர்அக்மலை அணுகிய சூதாட்ட தரகர்?

பாகிஸ்தான் அணி 2012–ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் இங்கிலாந்துடன் விளையாடியது, அப்போது அந்த அணி வீரர் உமர் அக்மலை சூதாட்ட தரகர் ஒருவர் அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்தியாவில் உள்ள சூதாட்ட தரகர் ஒருவர் அவருடன் தொடர்பு கொண்டு மேட்ச் பிக்சிங்கில் ஈடுபடுமாறு 3 முறை வலியுறுத்தி உள்ளார். 

சூதாட்டத்தில் ஈடுபட மறுத்து உமர்அக்மல் இது குறித்து ஊழல் தடுப்பு அதிகாரியிடம் உடனே தகவல் கொடுத்து இருக்கிறார். இதேபோல ஐ.சி.சி.க்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment