சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல்., போட்டி நடக்குமா?

சென்னையில் நடக்கும் ‘பிளே ஆப்’ போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.       

ஏழாவது ஐ.பி.எல்., தொடரில் சென்னையில் மே 18 (சென்னை–பெங்களூரு), மே 22ல் (சென்னை–ஐதராபாத்), இரு லீக் போட்டிகள் நடக்கின்றன. மே 27, 28ல் ‘பிளே ஆப்’ போட்டிகள், அதாவது தகுதிச்சுற்று 1 மற்றும் எலிமினேட்டர் என, மொத்தம் இந்த ஆண்டு 4 போட்டிகள் மட்டுமே நடக்கவுள்ளன.   
    
போட்டி நடக்கும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதியதாக கட்டப்பட்ட மூன்று காலரிகள் குறித்து  குறித்து தமிழக கிரிக்கெட் சங்கத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும் பிரச்னை உள்ளது. 

தவிர, இலங்கை வீரர்கள் சென்னையில் விளையாட தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இதுபோன்ற காரணங்கள், கடந்த ஆண்டு ‘பிளே ஆப்’ போட்டிகள் கடைசி நேரத்தில் டில்லிக்கு மாற்றப்பட்டது.       

இதுதொடர்பான வழக்கை, வரும் மே 6ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் தள்ளி வைத்தது. இதனால், இம்முறை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மே 27, 28ல் நடக்கும் இரண்டு ‘பிளே ஆப்’ போட்டிகளை, மும்பை பிரபோர்ன் மைதானத்துக்கு மாற்ற இருப்பதாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் படேல், சூசகமாக தெரிவித்தார்.       

காரணம் என்ன: கடந்த ஆண்டு இதுதொடர்பான பிரச்னையால், சென்னை–டில்லி அணிகள் மோதிய போட்டிக்கு, ஆட்டம் துவங்கும் சில மணி நேரத்துக்குப் பின் தான் அனுமதி கிடைத்தது.       

இம்முறையும் தாமதமாக அனுமதி கிடைத்தால், இங்குள்ள மூன்று காலரிகளின் 21 ஆயிரம் டிக்கெட்டுகளை பயன்படுத்த முடியாமல் இழப்பு ஏற்படலாம். இதை தவிர்க்கவே, போட்டிகளை மாற்றும் முடிவில் இருப்பதாக தெரிகிறது.

0 comments:

Post a Comment