IPL 7 - சென்னை-மும்பை நாளை எலிமினேட்டர் ஆட்டம்

7–வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் முதல் 2 இடங்களை பஞ்சாப், கொல்கத்தா பிடித்தன. 3–வது இடத்தை சென்னை சூப்பர் கிங்சும், 4–வது இடத்தை மும்பை இந்தியன்சும் பிடித்தன.

இந்த இரு அணிகளும் மும்பையில் நாளை இரவு 8 மணிக்கு நடக்கும் வெளியேற்றுதல் சுற்று (எலிமினேட்டர்) ஆட்டத்தில் மோதுகின்றன. இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும்.

ஜெயிக்கும் அணி குவாலிபையர் ஆட்டத்தில் தோற்ற அணியுடன் 2–வது தகுதி சுற்று ஆட்டத்தில் மோதும். இதில் வெல்லும் அணி இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

சென்னை அணியில் வெய்ன் சுமித், டுபெலிசிஸ், ரெய்னா, டோனி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும் உள்ளனர். பந்துவீச்சில் முன்னேற்றம் காண்பது அவசியம். அதில் மாற்றம் செய்வது கட்டாயமாக உள்ளது. எனவே நாளைய ஆட்டத்தில் ஹில்பெனாஸ் களம் இறங்க வாய்ப்பு உள்ளது.

மும்பை அணி தனது கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ராஜஸ்தானுக்கு எதிராக அதிரடியாக விளையாடி வென்று பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதனால் மிகுந்த நம்பிக்கையுடன் களம் இறங்குகிறது.

அந்த அணியில் மைக்ஹஸ்சி, ஆண்டர்சன், ரோகித்சர்மா, அம்பதி ராயுடு, போல்லார்ட் போன்ற பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இரு அணிகளும் லீக் ஆட்டத்தில் மோதிய 2 போட்டியிலும் சென்னை அணியே வெற்றி பெற்றது.

துபாயில் நடந்த ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், மும்பையில் நடந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் சென்னை வெற்றி பெற்றது. நாளைய ஆட்டத்தில் தோற்றால் வெளியேறும் நிலை ஏற்படும் என்பதால் வெற்றிக்கு இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment