இந்தியா–ஆஸ்திரேலியா மோதல் - அட்டவணை அறிவிப்பு

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் டிசம்பர் மாதம் துவங்குகிறது. இதற்கான அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) நேற்று அறிவித்தது.     

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு பிப்., 14ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி வரை உலக கோப்பை (50 ஓவர்) தொடர் நடக்கவுள்ளது. 

இத்தொடருக்கு முன், இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. 

இதற்கான அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சி.ஏ.,) நேற்று வௌியிட்டது. இதன்படி முதல் டெஸ்ட், பிரிஸ்பேனில் வரும் டிச., 4ம் தேதி துவங்குகிறது. 

மற்ற போட்டிகள் அடிலெய்டு (டிச., 12–16), மெல்போர்ன் (டிச., 26–30), சிட்னி (2015, ஜன., 3–7) நகரில் நடக்கும்.      

அதன்பின், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் தொடர், அடுத்த ஆண்டு ஜன., 16ம் தேதி முதல் பிப்., 1ம் தேதி வரை நடக்கவுள்ளது. 

இதில் ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதும். முடிவில், புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், பெர்த்தில் பிப்., 1ல் நடக்கும் பைனலில் விளையாடும்.      

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் முத்தரப்பு தொடருக்கு முன், ஆஸ்திரேலிய அணி, தென் ஆப்ரிக்காவுடன் மூன்று ‘டுவென்டி–20’ (நவ., 5, 7, 9), ஐந்து ஒருநாள் (நவ., 14, 16, 19, 21, 23) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.      

0 comments:

Post a Comment