இத்தாலி வீரரை கடித்த சுராசுக்கு தடை

உருகுவே அணியின் முன்னணி கால்பந்து வீரர் லுயிஸ் சுராஸ். உலகின் தலைசிறந்த வீரரான அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல் அடித்து முத்திரை பதித்து இருந்தார்.

இத்தாலிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் சுராஸ் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி விட்டார்.

ஆட்டத்தின் 80–வது நிமிடத்தில் இத்தாலி பின்கள வீரர் சிலினியின் தோள்பட்டையில் சுராஸ் கடித்தார். டெலிவிசன் ரீபேளயில் இத்தாலி வீரரை அவர் கடிப்பது தெளிவாக தெரிந்தது.

நடுவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட போது அதை அவர் கவனிக்காததால் நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிலினியன் கடித்த பகுதியில் காயம் ஏற்பட்டதை காண்பித்தார்.

சுராஸ் கடித்த விவகாரம் குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக பிபாவின் ஒழுங்கு நடவடிக்கை குழு சுராஸ் மீது அதிகாரபூர்வமான குற்றச்சாட்டை தெரிவித்து உள்ளது.

இதுதொடர்பாக சுராசுக்கு எஞ்சிய போட்டிகளில் தடை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தி நேரப்படி நள்ளிரவு 1.30 மணிக்கு (பிரேசில் நேரம் மாலை 5 மணி) சுராஸ் மீதான தடை குறித்து அறிவிக்கப்படும்.

சுராஸ் எதிர் அணி வீரரை கடிப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே 2 தடவை இது மாதிரி கடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இங்கிலாந்து பிரிமீயர் ‘லீக்’ போட்டியில் இவானோவிக் என்ற வீரரை கடித்ததற்காக அவருக்கு 10 போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment