ஐ.பி.எல்., வெற்றிவிழாவில் போலீஸ் தடியடி

ஐ.பி.எல்., கோப்பை வென்ற கோல்கட்டா அணிக்கு நேற்று பாராட்டு விழா நடந்தது. இதனை காண ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ரசிகர்கள் திரண்டதால், போலீசார் தடியடி நடத்த, பெரும் அமளி ஏற்பட்டது.

ஏழாவது ஐ.பி.எல்., தொடரின் பைனலில் அசத்திய  கோல்கட்டா அணி, பஞ்சாப்பை வீழ்த்தி, கோப்பை வென்றது. 

இதைக் கொண்டாடும் வகையில், கோல்கட்டா ஈடன் கார்டன் மைதானத்தில், கோல்கட்டா கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) மற்றும் மேற்கு வங்க அரசு இணைந்து விழா நடத்தின.

இதைக் காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி என்பதால், நேற்று காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர். மைதானத்தில் 65 ஆயிரம் பேருக்கு மட்டுமே இடம் என்ற நிலையில், ஒன்றரை லட்சம் பேர் குவிந்தனர். 

ஆனால், கோல்கட்டா போலீஸ் தரப்பில் இருந்து வழங்கப்பட்ட ‘சிறப்பு அனுமதி டிக்கெட்’ வைத்திருப்பவர்கள் மட்டும், மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட, குழப்பம் ஏற்பட்டது. 


போலீஸ் தடியடி:

சிலர் அங்கிருந்த தடுப்புகளை தாண்டிக் குதித்து, மைதானத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்றனர். இதனால் பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைக் கட்டுப்படுத்த அதிரடிப்படை போலீசார் தடியடி நடத்தினர். இதில் 6 பேருக்கு காயம் ஏற்பட்டது.


கோப்பை இல்லை:

மதியம் 3 மணிக்கு வீரர்கள் மைதானத்துக்கு  வந்து சேர்ந்தனர். வரும் போது கோப்பையை கொண்டு வராமல் விட்டுவிட, லேசான குழப்பம் ஏற்பட்டது. பின், போலீசாரை ஓட்டலுக்கு அனுப்பி, கோப்பையை கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

0 comments:

Post a Comment