ஐ.சி.சி., விதிமுறை மாற்றப்படுமா?

ஐ.சி.சி., விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரும் எவ்வித திட்டமும் இல்லை,’’ என, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் சீனிவாசன் தெரிவித்தார். 

இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன், இந்திய வீரர் ரவிந்திர ஜடேஜா ‘தள்ளு’ விவகாரம் குறித்து விசாரித்த ஐ.சி.சி., கமிஷனர் கார்டன் லீவிஸ், போதிய ஆதாரம் இல்லை எனக்கூறி இருவரையும் விடுவித்தார். 

இதை எதிர்த்து ஐ.சி.சி., ‘அப்பீல்’ செய்ய வேண்டும் என்ற, இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. 

இதன் எதிரொலியாக, ஐ.சி.சி., நடத்தை விதிகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கருத்து தெரிவித்திருந்தார். 

இது குறித்து ஐ.சி.சி., தலைவர் சீனிவாசன் கூறுகையில்,‘‘ வீரர்களுக்கான நடத்தை விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரும் எவ்வித திட்டமும் ஐ.சி.சி.,யிடம் இல்லை,’’ என்றார். 

0 comments:

Post a Comment