புத்துயிர் தந்த புதியவர்கள் - ரகானே உற்சாகம்

ஒருநாள் தொடருக்கு மட்டும் தேர்வான ரெய்னா, அம்பதி ராயுடு  உள்ளிட்ட புதிய வீரர்கள், இந்திய அணிக்கு புத்துயிர் தந்தனர்,’’ என, இளம் வீரர் அஜின்கியா ரகானே தெரிவித்தார்.      

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை, இந்திய அணி 1–3 என்ற கணக்கில் இழந்தது. பின், ரெய்னா, அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சன் உள்ளிட்டோர் ஒருநாள் தொடருக்கான அணியில் இடம் பிடித்தனர். 

இவர்களின் வரவால் இந்திய அணி புத்துயிர் பெற்றது. கார்டிப், நாட்டிங்காமில் நடந்த ஒருநாள் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றி பெற்று, 2–0 என முன்னிலை பெற்றது.      

இதுகுறித்து இந்திய அணியின் இளம் வீரர் அஜின்கியா ரகானே கூறியது: ஒருநாள் தொடருக்கு மட்டும் தேர்வான ரெய்னா, அம்பதி ராயுடு உள்ளிட்ட புதிய வீரர்களின் வரவால் இந்திய அணி புத்துணர்ச்சி பெற்றது. 

டெஸ்ட் தொடரில் இந்தியாவின் ‘பீல்டிங்’ படுமோசமாக இருந்தது. ஆனால் ஒருநாள் போட்டிகளில், ‘பீல்டிங்கில்’ அசத்தி வருகின்றோம். இது மகிழ்ச்சியாக உள்ளது.      

டெஸ்ட் தொடரில் கண்ட மோசமான தோல்வி, எங்களை வெகுவாக பாதித்தது. பின், ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக் கொண்டு, ஒருநாள் தொடரில் கவனம் செலுத்தினோம். 

இதற்கு நல்ல பலன் கிடைத்தது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட, கார்டிப்பில் நடந்த 2வது போட்டியில் வெற்றி பெற்று, தொடரை வெற்றியுடன் துவக்கினோம். பின், மூன்றாவது போட்டியிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை தக்கவைத்துக் கொண்டோம்.      

காயம் காரணமாக ரோகித் சர்மா விலகியதால், மீண்டும் துவக்க வீரராக களமிறங்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான்காவது வீரராக களமிறங்கி, திடீரென துவக்க வீரராக விளையாடுவது எளிதான காரியமல்ல. 

ஆனால், துவக்க வீரராக விளையாடிய அனுபவம் நிறைய இருப்பதால், இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. பந்துகளை சந்திப்பதில் லேசான மாற்றம் செய்தால் போதுமானது. விராத் கோஹ்லி, ஷிகர் தவான் விரைவில் எழுச்சி காண்பார்கள்.      

இவ்வாறு ரகானே கூறினார்.      

0 comments:

Post a Comment