சாஸ்திரிக்கு சல்யூட் - வாயார பாராட்டுகிறார் தவான்

இந்திய அணியில் மாற்றத்தை ஏற்படுத்தினார் ‘இயக்குனர்’ ரவி சாஸ்திரி. வீரர்களுக்கு தேவையான தன்னம்பிக்கை தந்தார்,’’ என, ஷிகர் தவான் பாராட்டினார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1–3 என, இழந்தது. இதையடுத்து பயிற்சியாளர் பிளட்சர் ஓரங்கட்டப்பட்டார். 

அணிக்கு புத்துயிர் அளிக்க, முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி, ‘இயக்குனர்’ ஆக நியமிக்கப்பட்டார். உடனே களத்தில் குதித்த இவர், வலைப் பயிற்சியை நேரடியாக கண்காணித்தார்.  

ரகானே, ரெய்னா, தவான் உள்ளிட்ட வீரர்களுக்கு உரிய ஆலோசனை வழங்கினார். இதன் காரணமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில், ரெய்னா சதம் அடிக்க, இந்தியா வெற்றி பெற்றது. அப்போது ரெய்னா கூறுகையில்,‘ ரவி சாஸ்திரியின் உற்சாக பேச்சு, நம்பிக்கை கொடுத்தது,’ என்றார்.

தற்போது நான்காவது போட்டியில், ரகானே சதம், ஷிகர் தவான் 97 ரன்கள் எடுக்க, இந்தியா எளிதான வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

நீண்ட இடைவெளிக்குப் பின், இழந்த ‘பார்மை’ மீட்ட மகிழ்ச்சியில் ஷிகர் தவான் கூறியது:

அடுத்த ஆறு மாதத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் விளையாடவுள்ளோம். இந்நிலையில், இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் தொடரை வென்றது, மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.

டெஸ்ட் தொடரில் மோசமாக தோற்ற நிலையில், நான் மட்டுல்ல, ஒட்டுமொத்த அணியும் துவண்டு கிடந்தது. இதில் இருந்து எப்படி மீண்டு வந்தோம் என்பது தான் இப்போதைய கேள்வி. ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருந்து, இதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு வந்தனர். உண்மையில் இந்திய வீரர்களை நினைத்து பெருமையாக உள்ளது.

0 comments:

Post a Comment