தோனி, ரெய்னாவிடம் விசாரணை - விரைவில் சூதாட்ட அறிக்கை தாக்கல்

ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்து முத்கல் தலைமையிலான குழு, கேப்டன் தோனி, இவரது நண்பர் அருண் பாண்டே மற்றும் ரெய்னாவிடம் விசாரணை நடத்தியது. இந்த வாரத்துக்குள் சுப்ரீம் கோர்ட்டில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஆறாவது ஐ.பி.எல்., சூதாட்டம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின் பேரில், ஓய்வு பெற்ற நீதிபதி முத்கல் குழு தலைமையிலான குழு நேரடியாக விசாரிக்கிறது. 

இதன் முதற்கட்ட அறிக்கையில் பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் மற்றும் இந்திய அணி கேப்டன் தோனி, ரெய்னா உட்பட 13 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளதாக தெரிகிறது. 

இந்த வார கடைசிக்குள்  (நவ., 2) முத்கல் குழு இறுதி அறிக்கை சமர்பிக்க வேண்டும். இதனால், விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 


எப்போது நடந்தது:

கடந்த 11ம் தேதி, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இரண்டாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்க, இந்திய அணி டில்லி சென்றது.

அப்போது, தங்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு, ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி கேப்டனாக இருக்கும் தோனி, ரெய்னா மற்றும் இரு வீரர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இதில் தோனியிடம் மட்டும் நான்கு மணி நேரம் விசாரணை நடந்ததாம். அடுத்து ரெய்னா மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டுள்ளார்.

1 comments: