இந்திய அணி தேர்வு ஒத்திவைப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் டிச., 4ல் பிரிஸ்பேனில் துவங்குகிறது.

இத்தொடருக்கான இந்திய வீரர்களை தேர்வு செய்ய இன்று மும்பையில் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) கூட்டம் கூடியது. இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்துக்குப் பின்பும், அணித்தேர்வு நடக்கவில்லை.


காரணம் என்ன:

தற்போது நடக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர் முடிந்த பின், இந்திய அணியை அறிவிப்பதாக தேர்வாளர்கள் கூறினர்.

இருப்பினும், ஐ.பி.எல்., சூதாட்டம் குறித்து நீதிபதி முத்கல் குழு அளித்த இறுதி அறிக்கை மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் வரும் நவ. 10ல்  வருகிறது. 

இதில் உள்ள விவரங்கள் தெரியவந்த பிறகு, வீரர்களுக்கான தேர்வு நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment