ஆந்திர மாநிலத்தில் உள்ள கிராமத்தை தத்தெடுத்தார் சச்சின்

ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டம்ராஜு கன்டிரிகா கிராமத்தை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தத்தெடுத்துள்ளார். 

இந்திய பிரதமர் மோடி, கிராமங்களை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கில் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்தை கொண்டு வந்தார். ஒவ்வொரு எம்.பி.,யும் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு உதவ வலியுறுத்தினார். 

இதன் படி கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் ராஜ்யசபா எம்.பி.,யுமான சச்சின் ஆந்திர மாநிலத்தில் உள்ள புட்டம்ராஜு கன்டிரிகா கிராமத்தை தத்தெடுத்தார். 

நெல்லுார் மாவட்டத்தில் உள்ள இக்கிராமத்தில் சுத்தமான குடிநீர் போன்ற பல வளர்ச்சி திட்டத்தை இவர் உருவாக்க உள்ளார். 

இன்று இக்கிராமத்திற்கு வந்த சச்சினுக்கு மலர் துாவி உற்சாக வரவேற்பு தரப்பட்டது. 

இது குறித்து சச்சின் கூறுகையில்,‘‘ ஒரு கிராமத்தை தத்தெடுக்கும் திட்டம் குறித்து ஏற்கனவே என் மனதில் இருந்தது. 

புட்டம்ராஜு கன்டிரிகா கிராமத்தில் குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளது. இதை ஏற்படுத்தவதற்கான செயல்பாட்டை துவங்குவேன்,’’ என்றார். 

0 comments:

Post a Comment