விரக்தியில் விலகிய சேவக், காம்பிர்

இந்திய அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் தியோதர் டிராபியில் இருந்து சேவக், காம்பிர் விலகினர்.      

இந்தியாவின் அனுபவ துவக்க ஜோடி சேவக், 36, காம்பிர், 33. மோசமான ‘பார்ம்’ காரணமாக இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டனர்.   
    
இதன் பின் உள்ளூர் போட்டிகளில் அதிகமாக சாதிக்கவில்லை. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில், இவர்கள் சேர்க்கப்படவில்லை.      

தவிர, தற்போதைய துவக்க வீரர்கள் ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரகானே என, அனைவரும் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்துகின்றனர். இவர்களுடன் முரளி விஜயும் காத்திருக்கிறார்.      

இதனால் உலக கோப்பை தொடருக்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியில் கூட சேவக், காம்பிர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை. இந்த விரக்தியில், தியோதர் டிராபி தொடரை புறக்கணிக்க முடிவு செய்தனர்.      

வரும் 29ம் தேதி துவங்கும் இத்தொடரில், 15 பேர் கொண்ட வடக்கு மண்டல அணியில் இவர்கள் இடம் பெற வாய்ப்பு இருந்தது.       

ஹர்பஜன் சிங் தலைமையிலான இந்த அணியில், தங்களை சேர்க்க வேண்டாம் என, தெரிவித்துள்ளனர். வடக்கு மண்டல தேர்வுக்குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில்,‘‘சேவக் தனக்குப் பதில் யாராவது ஜூனியரை தேர்வு செய்யுமாறு கூறிவிட்டார். காம்பிரும் விளையாட விரும்பவில்லை. இதற்கான உண்மையான காரணம் எங்களுக்குத் தெரியவில்லை,’’ என்றார்.

0 comments:

Post a Comment