பிரதமர் மோடியின் உலக கனவு - கபில் தேவ், கவாஸ்கர் பங்கேற்பு

வரும் 2015ல் உலக கோப்பை தொடரின் பைனலை நடத்த தகுதியான மைதானமாக மெல்போர்ன் திகழ்கிறது. இதில், இந்திய–ஆஸ்திரேலியா விளையாட வேண்டும்,’’என, பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய பிரதமர் மோடி ‘ஜி–20’ மாநாட்டில் பங்கேற்றார். நேற்று வரலாற்று சிறப்புமிக்க மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு சென்றார். 

161 ஆண்டு கால பாரம்பரியமிக்க மிகப் பிரமாண்டமான இம்மைதானத்தில் சுமார் 1 லட்சம் பேர் அமர்ந்து போட்டியை காணலாம். இங்கு நடந்த சிறப்பு கூட்டத்தில் ஆஸ்திரேலிய பிரதமர் அபாட், இந்திய அணி முன்னாள் கேப்டன்கள் கவாஸ்கர், கபில்தேவ், லட்சுமண், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், மெக்ராத், பிரட் லீ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மோடியின் ‘கிரிக்கெட் ராஜதந்திர’ பேச்சை சுமார் 600 பேர்  ஆர்வத்துடன் கேட்டனர். 


மோடி பேசியது:

மெக்ராத், பிரட் லீ பந்துவீசும் சமயத்தில் சதத்தை நெருங்கும் வீரருக்கு மிகவும் பதட்டமாக இருக்கும். இதே போன்றதொரு உணர்வு தான் வரலாற்று சிறப்புமிக்க மெல்போர்ன்  மைதானத்தில் பேசும் போது எனக்கு ஏற்படுறது.

இங்கு டிசம்பரில் நடக்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் போட்டியை ‘டிவி’ யில் காண இந்தியர்கள் பலர் அதிகாலையில் விழித்துவிடுவர். இப்படிப்பட்ட மைதானத்தில்தான் இந்திய அணி 1985ல் சாம்பியன்ஸ் டிராபியை வென்றது. 

இந்தியா, ஆஸ்திரேலியா ஜாம்பவான்களான பிராட்மேன், சச்சினின் சாதனைகளை கொண்டாட வேண்டும். அடுத்த ஆண்டு உலக கோப்பை (2015) தொடரை சிறப்பாக நடத்த வாழ்த்துகிறேன். 

பைனலை நடத்த தகுதியான மைதானமாக மெல்போர்ன் திகழ்கிறது. இதில், இந்திய–ஆஸ்திரேலியா விளையாட வேண்டும். இந்த நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்து இருக்கும்

இவ்வாறு மோடி பேசினார். 

1 comments:

  1. அருமையான தகவல் சகோ......

    இலவச 150 உடனடி ரீசார்ஜ் :- http://naveensite.blogspot.in/2014/11/earntalktime.html

    ReplyDelete