மறக்க முடியாத நினைவுகள் - கவாஸ்கர்

மத்திய அரசின் அதிகாரப்பூர்வமான வெளிநாட்டு பயணங்களில், விளையாட்டு வீரர்களை அழைத்துச் செல்வது என்பதை, இதற்கு முன் எந்த இந்திய பிரதமரும் நினைத்தது கூட கிடையாது. 

முதன் முறையாக, ஆஸ்திரேலிய பயணத்தில் மோடி இதை செய்து காட்டினார். 

மெல்போர்ன் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சி தான் மிகவும் சிறப்பாக அமைந்தது. அப்போது எடுக்கப்பட்ட போட்டோவில், ‘கவாஸ்கர்–பார்டர்’ டிராபியை, ஆஸ்திரேலிய பிரதமர் அபாட்டும், அடுத்து 2015ம் ஆண்டுக்கான உலக கோப்பையை நமது பிரதமர் மோடியும் பிடித்திருந்தனர். 

இதில் விசேஷம் என்னவெனில், இரண்டுமே தற்போது வென்றவர்கள் கையில் தான் இருந்தது. அதாவது நடப்பு உலக சாம்பியன் இந்தியா, நடப்பு ‘கவாஸ்கர்–பார்டர்’ டிராபியை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. என்ன ஒரு ஒற்றுமையான விஷயம்.


உண்மையான கேப்டன்:

அடுத்து நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சி மிகவும் ‘ஹைலைட்டாக’ இருந்தது. மகாத்மா காந்தியின்  ராட்டை போன்று அமைக்கப்பட்டு இருந்த இந்த நினைவு பரிசில் மூன்று வெள்ளை நிற பந்துகள் வைக்கப்பட்டு இருந்தன.

இதில் பிரதமர் மோடி, கபில்தேவ், லட்சுமண் மற்றும் நான் கையெழுத்திட்டு இருந்தோம். 

அப்போது கபில்தேவ்,‘ இவற்றில் மோடியின் கையெழுத்து தான் மிகவும் முக்கியமானது, ஏனெனில், அவர் தான் இந்தியாவின் உண்மையான கேப்டன்,’ என்றார்.

0 comments:

Post a Comment