ரெய்னாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு

துாய்மை இந்தியா திட்டத்தில் சேர இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரெய்னா, முகமது கைப் உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். 

இந்தியாவை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில், ‘துாய்மை இந்தியா’ என்ற திட்டத்தை பிரதமர் மோடி, கடந்த அக்., 2ல் துவக்கி வைத்தார். 

இத்திட்டத்தில் சேரும்படி சச்சின் போன்ற முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனை சச்சினும் ஏற்றுக் கொண்டார். 

தற்போது, உத்தரபிரதேசத்திலுள்ள வாரணாசி சென்றுள்ள மோடி, இத்திட்டத்தில் சேர இந்திய கிரிக்கெட் வீரர்களான முகமது கைப், ரெய்னா உள்ளிட்ட 9 முக்கிய நபர்களை அழைத்துள்ளார். இதை ரெய்னாவும் ஏற்றுக் கொண்டுள்ளார். 


மிகப்பெரும் கவுரவம்:

இது குறித்து ரெய்னா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘‘ துாய்மை இந்தியா திட்டத்தில் சேர எனக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இதை மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன். 

ஒரு நாள் தொடர் முடிந்து, உத்தரபிரதேசம் வந்தபின் இதற்கான முயற்சியில் இறங்குவேன்,’’ என தெரிவித்துள்ளார். 

முகமது கைப், ரெய்னா இருவரும் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள். 

0 comments:

Post a Comment