இந்தியா உலக கோப்பை வெல்லும் - சச்சின் நம்பிக்கை

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்புள்ளது,’’ என, இந்திய மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் நம்பிக்கை தெரிவித்தார். 

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், 41. சர்வதேச போட்டிகளில் ‘சதத்தில்’ சதம் உட்பட எண்ணற்ற சாதனைகள் படைத்தார். கடந்த ஆண்டு ஓய்வு பெற்ற இவர், ‘பிளேயிங் இட் மை வே’ என்ற சுயசரிதை வௌியிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு பிப்.14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி பட்டம் வெல்லும் என, நம்பிக்கை தெரிவித்தார். 

இதுகுறித்து சச்சின் கூறியது:

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்று எல்லோரும் எண்ணுகின்றனர்.

ஆனால், இங்குள்ள மைதானங்களின் அளவு பெரியது. இதனால், இம்முறை சுழற்பந்து வீச்சாளர்கள், அணியின் வெற்றிகளில் முக்கிய பங்குவகிப்பர்.

இங்கு, இந்திய அணி உலக கோப்பையை மீண்டும் வெல்ல, அதிக வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் ‘கறுப்பு குதிரைகளாக’ வலம் வருவர்.

இந்த நான்கு அணிகள் தான் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது எனது கணிப்பு. அதே நேரம், கிரிக்கெட்டினை பொறுத்தவரையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால், தற்போதுள்ள ‘பார்மில்’ இங்கிலாந்து அணி மற்ற அணிகளுக்கு நெருக்கடி தர முடியாது என எண்ணுகிறேன்.


திருப்பு முனை:

இங்கிலாந்தில் உள்ள ஓல்டு டிரபோர்டு மைதானத்தில்தான் எனது முதல் டெஸ்ட் சதம் அடித்தேன். இங்கு, கடந்த 1992ல் முதல் முறையாக யார்க்ஷயர் அணிக்காக கவுன்டி போட்டியில் பங்கேற்றேன்.

இதனால், இங்குள்ள ஆடுகளங்கள், சூழ்நிலைகள் குறித்து நன்கு தெரிந்து கொண்டேன். இது என் வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது.

இவ்வாறு சச்சின் கூறினார். 

0 comments:

Post a Comment