கோஹ்லி, தவான் மோதல் - டிரெசிங் ரூமில் பரபரப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின்போது,  ‘டிரெசிங் ரூமில்’ இந்திய வீரர்கள் விராத் கோஹ்லி, தவான் இடையே வார்த்தை போர் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. 

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. முதலிரண்டு போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. 

இதில் பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது போட்டியின், நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணியில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. பயிற்சியில் ஈடுபட்ட தவானுக்கு காயம் ஏற்பட்டதால், இரண்டாவது இன்னிங்சில் அவசரம் அவசரமாக கோஹ்லி களமிறக்கப்பட்டார். 

இதனால் இவுர் 1 ரன்னில் அவுட்டானார். இந்நிலையில், அன்றைய நாள் ‘டிரெசிங் ரூமில்’ கோஹ்லிக்கும், தவானுக்கு வாக்குவாதம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


நீங்கள்தான் காரணம்:

ஜான்சன் பந்தில் 1 ரன்னில் அவுட்டான கோஹ்லி கோபத்துடன் ‘டிரெசிங் ரூம்’ சென்றுள்ளார். நான் 1 ரன்னில் அவுட்டாகியதற்கு, நீங்கள்தான் காரணம் என தவானை நோக்கி குற்றம் சாட்டியுள்ளார். 

இதற்கு தவானும் பதிலடி தந்துள்ளார். அதாவது, இந்திய அணிக்காக விளையாடுவதை பெருமையாக கருதுகிறேன். எனக்கு காயம் ஏற்பட்டுள்ளது என பொய்யாக சொல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 

இப்படி வார்த்தை போர் அதிகமானவுடன், இந்திய அணி இயக்குனர் ரவி சாஸ்திரி இடையே வந்து இருவரையும் சமாதானம் செய்துள்ளார்.

0 comments:

Post a Comment