சேவக், காம்பிர், யுவராஜ் இனி அவ்ளோதானா?

உலக கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் சேவக், காம்பிர், யுவராஜ் சிங் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம் பெறாதது, இவர்களது கிரிக்கெட் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.

கடந்த 2011 உலக கோப்பை தொடர் துவக்க போட்டியில், சேவக் 175 ரன்கள் (எதிர்–வங்கதேசம்) எடுத்தார். யுவராஜ் தொடர் நாயகன் (362 ரன், 15 விக்.,) ஆனார். ஜாகிர் கான் 21 விக்கெட் வீழ்த்தினார். இலங்கைக்கு எதிரான பைனலில் காம்பிர் 97 ரன்கள் எடுத்தார்.

தற்போது இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. ஏனெனில், கடந்த இரு ஆண்டுகளாக காம்பிர், சேவக்கின் உள்ளூர் சராசரி 20 ரன்கள் தான். ஒவ்வொரு 6 போட்டிக்கும் ஒரு முறை தான் அரை சதம் கூட அடிக்கின்றனர்.

விஜய் ஹசாரே தொடரில், யுவராஜ் (5 போட்டி, 168 ரன்) சொதப்பினார். 6 போட்டியில் ஹர்பஜன் சிங் 7 விக்கெட் தான் வீழ்த்தினார். ஜாகிர் கானை பொறுத்தவரையில் கடந்த மே மாதத்தில் இருந்து கிரிக்கெட் விளையாடவே இல்லை.


வாய்ப்பு குறைவு:

இருப்பினும், உத்தேச அணியில் இருந்து, 2015, ஜன., 7ம் தேதிக்குள் 15 பேர் தேர்வு செய்யப்படுவர். இதில் சேவக் உள்ளிட்ட வீரர்கள் இடம் பெறலாம் என்றாலும், அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு தான்.


காரணம் என்ன:

ஏனெனில், சேவக், 36, காம்பிர், 33, இருவரும் ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று ஒரு ஆண்டு ஆகிறது. ஜாகிர் கான், 36, கடந்த 27 மாதங்களாக அணியில் இல்லை. 

ஹர்பஜன் சிங், 34, இந்திய ஒரு நாள் அணியில் விளையாடி 3 ஆண்டுகள் ஆகிறது. இதனால், இந்த வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை கிட்டத்தட்ட முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

0 comments:

Post a Comment