பயிற்சியில் சேவக், காம்பிர்

உலக கோப்பை தொடருக்கான உத்தேச அணியில் இடம்பெறாத சோகத்தை சேவக், காம்பிர் வெளிகாட்டவில்லை. ரஞ்சி கோப்பை டிராபி தொடரில் சாதிக்க தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர்.

வரும் 2015ல் (பிப்., 14 – மார்ச் 29) 11வது உலக கோப்பை தொடர், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் நடக்கவுள்ளது. இதற்கான 30 பேர் கொண்ட இந்திய உத்தேச அணி அறிவிக்கப்பட்டது. 

இதில் ‘சீனியர்’ வீரர்களான சேவக், காம்பிர், யுவராஜ் உள்ளிட்ட 5 நபர்கள் இடம்பெறவில்லை. இதனை கண்டுகொள்ளாத இவர்கள் வழக்கம் போல பயிற்சியில் ஈடுபட்டனர்.

சவுராஷ்டிரா அணிக்கு எதிராக நாளை துவங்கவுள்ள ரஞ்சி டிராபி தொடரில் டில்லி அணி சார்பில் சாதிக்க ரோஸ்னாரா மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். 

சக வீரர்கள் அனைவரும் வழக்கமான வெள்ளை நிறத்திலான உடையணிந்து வலைபயிற்சியில் பங்கேற்றனர். ஆனால், இந்த இருவர் மட்டும் வண்ண ஆடையில் இருந்தனர். 

தவிர, ‘பீல்டிங்கிற்கான’ பயிற்சியிலும் சேவக் ஈடுபட்டார். துவக்க வீரரான இவர், எதிர் வரும் போட்டிகளில் ‘மிடில்–ஆர்டரில்’ களமிறங்க வாய்ப்பு அதிகம்.

கேப்டன் காம்பிர் கூறுகையில்,‘‘ ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடும்போது, சிறப்பான ‘டிரசிங் ரூம்’ முக்கியம். அணியின் வெற்றிக்கும் இது வழிவகுக்கும். 

உலக கோப்பை உத்தேச அணி குறித்து காம்பிர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

0 comments:

Post a Comment