இரண்டு மூன்று வருடங்கள் விளையாட விரும்புகிறேன் - சேவாக்

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரராக திகழ்ந்த சேவாக்கை சமீபகாலமாக இந்திய அணி புறக்கணித்து வருகிறது. தற்போது, உலகக்கோப்பை அணிக்கான உத்தேச அணியில் அவர் பெயர் இடம் பெறவில்லை. 

இதனால் அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடியும் தருவாயில் உள்ளது என்று கூறப்பட்டது. ஆனால், நான் இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்கள் விளையாட விரும்புகின்றேன் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

நான் கிரிக்கெட்டை ரசித்து விளையாடுகிறேன். மீண்டும் இந்திய அணியில் இடம்கிடைக்காவிட்டாலும் நான் வருத்தம் அடையமாட்டேன். ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் கனவும் தனது தாய் நாட்டிற்காக விளையாட வேண்டும் என்பதுதான். நான் கிரிக்கெட்டில் தீவிரமாக இருக்கும்போது இந்தியாவிற்காக விளையாட வேண்டும் என்று விரும்பினேன்.

என்னுடைய கனவு நினைவேறிய பிறகு, அடுத்து என்ன நடக்கும் என்று நான் நினைத்தபோது, இந்தியாவிற்காக விளையாடுவது எளிது. ஆனால், 10 முதல் 15 வருடம் நிலையாக விளையாடுவது கஷ்டம் என்று சக வீரர் ஒருவர் கூறினார். 

அப்போது 100 போட்டிகளில் விளையாட வேண்டும் என்று எனது கனவை மாற்றிக்கொண்டேன். அதையும் நான் நல்லமுறையில் எட்டிவிட்டேன். இனிமேல் அங்கு நான் சாதிக்க ஒன்றுமில்லை. கிரிக்கெட்டை ஒரு மகிழ்ச்சியாக நினைக்கிறேன்.

நீங்கள் உங்கள் வாழ்க்கையைில் சந்தோசமாக இருக்க வேண்டும். கிரிக்கெட் வீரர்கள் தங்களது சாதனையை எட்டுவதற்காக கவலைப்படுவாரக்ள். 

அதாவது, டெஸ்ட் போட்டியில் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரன்கள் அடிக்க வேண்டும் என்ற கவலை அவர்களிடம் இருக்கும். ஆனால், எனக்கு அதிமாதிரி இல்லை. நான் 100 போட்டியில் விளையாடி விட்டேன். இன்னும் விளையாட வேணடும் என்று விரும்புகிறேன்.

நான் இன்றோ அல்லது இரண்டு வருடம் கழித்தோ ஓய்வு பெற்றால் அது எனது வாழக்கையில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தாது. நான் 10 ஆயிரம் ரன்கள் அடித்தேன் என்றால் யார் மகிழ்ச்சி அடைவாரக்ள். 

நான் மட்டுமே மகிழ்ச்சி அடைவோன். 10 ஆயிரம், 15 ஆயிரம் ரன்களை பற்றி ரசிகர்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். அது என்னுடைய தனிப்பட்ட திருப்திதான்.

என்னுடைய ஆட்டத்தைப் பார்க்கும்போது, ரன் அடித்தால் விரைவாக ரன் அடிப்பேன். அவுட் ஆனாலும் உடனே அவுட் ஆகிவிடுவேன். என்னுடைய ஆட்டத்தை மாற்ற நான் முயற்சி செய்யவில்லை.

நீங்கள் விளையாடாவிட்டால் இந்திய அணி தோல்வியடைந்து விடும் என்று எனது மகன் என்னிடம் கூறியபோது, அவனை நான் கண்டித்துள்ளேன். இந்தியா வெற்றி பெறுவதுதான் முதல் நோக்கம். நான் வியைாடாதது ஒரு விஷயமே இல்லை. நான் வீரர்கள் அறையில் இல்லை. ஆனால், வேறு எதாவது ஒரு வீரர்கள் போட்டியில் வெற்றி பெறுவதற்கு தனது பங்களிப்பை அளிப்பார். அதற்கான நான் சந்தோஷமாக இருப்பேன்.

தற்போது ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ள அணியில் நல்ல வீரர்கள் உள்ளார்கள். அவர்களுக்கு நாம் வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். எனது முதல் பயம் இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவாக இருந்தது. 

முதல் போட்டியில் சதம் அடித்த நான் அதன்பின் சரியாக விளையாடவில்லை. கடந்த காலங்களில் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள் முதல் 15 இன்னிங்சில் சொதப்பியவர்கள். பின்னர் சுதாகரித்துக்கொண்டு 100 போட்டிகளுக்கு மேல் விளையாடியிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர கூறினார்.

0 comments:

Post a Comment