புஜாரா, முரளிவிஜய் அர‌ைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டில் நடக்கும் முதல் டெஸ்டில் இந்தியாவின் புஜாரா, முரளி விஜய் (53) அரைசதம் அடித்தனர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட ‘பார்டர் – கவாஸ்கர்’ கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் நடக்கிறது. 

இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 517 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலிய அணி ‘டிக்ளேர்’ செய்தது. ஸ்டீவன் ஸ்மித் (162), மிட்சல் ஜான்சன் (0) அவுட்டாகாமல் இருந்தனர். 


முரளி விஜய் அரைசதம்: 

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் நடக்கிறது. முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணியின் ஷிகர் தவான் (25), ரியான் ஹாரிஸ் பந்தில் போல்டானார். பொறுப்பாக ஆடிய முரளி விஜய் அரைசதம் அடித்தார். 

இவர், 53 ரன்கள் எடுத்த போது மிட்சல் ஜான்சன் ‘வேகத்தில்’ அவுட்டானார். மறுமுனையில் அசத்திய புஜாரா, டெஸ்ட் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார்.

உணவு இடைவேளைக்கு பின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து, 364 ரன்கள் பின்தங்கி இருந்தது. புஜாரா (52), விராத் கோஹ்லி (18) அவுட்டாகாமல் இருந்தனர். 

ஆஸ்திரேலியா சார்பில் மிட்சல் ஜான்சன், ஹாரிஸ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

0 comments:

Post a Comment