இந்தியாவுக்கு மீண்டும் உலக கோப்பை - கங்குலி கணிப்பு

உலக கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும்,’’ என, முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கணித்துள்ளார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, முத்தரப்பு ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. மூன்றாவது அணியாக இங்கிலாந்து அணி விளையாடுகிறது. மெல்போர்னில் நாளை நடக்கவுள்ள லீக் போட்டியில், இந்திய அணி, ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

முத்தரப்பு தெடாருக்கு பின், வரும் பிப்., 14ல் துவங்கவுள்ள உலக கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. இதில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியது: தோனி தலைமையிலான இந்திய அணிக்கு மீண்டும் உலக கோப்பை வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 

மீடியாவில் பேசுவதற்காக இதைக் கூறவில்லை. ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலமாக உள்ளது. 

டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒருநாள் போட்டி முற்றிலும் மாறுபட்டது என்பதால், பவுலர்களும் சிறப்பாக செயல்படுவார்கள். டெஸ்ட் அணியை காட்டிலும், ஒருநாள் அணி சிறப்பாகவே உள்ளது.

உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த அணியாக வலம் வரும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முத்தரப்பு லீக் போட்டியில், மிகக் குறைந்த ஸ்கோரை எடுத்த இங்கிலாந்து அணி, எளிதில் தோல்வி அடையவில்லை. ஆஸ்திரேலியாவின் 7 விக்கெட்டுகளை இங்கிலாந்து பவுலர்கள் கைப்பற்றினர்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

0 comments:

Post a Comment