உலக கோப்பை அணி - யுவராஜ், விஜய்க்கு நோ

உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்த்த யுவராஜ் சிங் புறக்கணிக்கப்பட்டார். ரவிந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஸ்டூவர்ட் பின்னி வாய்ப்பு பெற்றனர்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ளது. இதற்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி கடந்த டிச., 4ல் அறிவிக்கப்பட்டது.

இதிலிருந்து 15 பேர் கொண்ட இந்திய அணியை தேர்வு செய்வதற்கான கூட்டம் தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் படேல் தலைமையில் நடந்தது. இதில், கேப்டன் தோனி, பயிற்சியாளர் பிளட்சர் ‘வீடியோ கான்பெரன்சிங்’ முறையில், ஆஸ்திரேலியாவில் இருந்து பங்கேற்றனர்.

பின் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் சஞ்சய் படேல் அணியை அறிவித்தார். துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான், ரகானே இடம் பெற்றனர்.

‘மிடில் ஆர்டரில்’ துணைக் கேப்டன் கோஹ்லி, ரெய்னா, கேப்டன் தோனி வருகின்றனர். 3 சுழற்பந்து வீச்சாளர்களாக அஷ்வின், அக்சர் படேலுடன், காயத்தில் இருந்து இன்னும் மீளாத ரவிந்திர ஜடேஜா சேர்க்கப்பட்டது சர்ச்சை கிளப்பியுள்ளது.

உலக கோப்பை போட்டி நடக்கும் மைதானங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால், இஷாந்த் சர்மா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, உமேஷ் யாதவ் என, 4 பேர் இடம் பெற்றனர். இவர்களுடன், ஸ்டூவர்ட் பின்னி, அம்பதி ராயுடுவும் அணியில் இடம் பிடித்தனர். 


‘இருவர்’ பரிதாபம்:

ரஞ்சி கோப்பை தொடரில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்ததால் எப்படியும் அணியில் இடம் பெறுவார் என்று நம்பப்பட்ட யுவராஜ் சிங்கிற்கு, ஏமாற்றம் தான் கிடைத்தது. இதேபோல, தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் முரளி விஜய்க்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

0 comments:

Post a Comment