கோப்பை வென்றது ஆஸி., - இங்கிலாந்து ஏமாற்றம்

இங்கிலாந்துக்கு எதிரான முத்தரப்பு ஒரு நாள் தொடரின் பைனலில் மேக்ஸ்வெல் ஆல்–ரவுண்டராக அசத்த ஆஸ்திரேலிய அணி 112 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் கோப்பை வென்று அசத்தியது. 

முத்தரப்பு ஒருநாள் தொடரில் சொதப்பிய இந்திய அணி பரிதாபமாக வெளியேறியது. இன்று பெர்த்தில் நடந்த பைனலில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.


மேக்ஸ்வெல் அதிரடி:

ஆஸ்திரேலிய அணியின் பின்ச் டக்–அவுட் ஆனார். ஆண்டர்சன் வேகத்தில் வார்னர் (12) வெளியேறினார். பின் வந்த கேப்டன் பெய்லியும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டீவன் ஸ்மித் 40 ரன்கள் எடுத்தார். 

சிறப்பாக செயல்பட்ட மேக்ஸ்வெல் அரை சதம் அடித்தார். இவர் பிராட் பந்தில் 95 ரன்களில் அவுட்டானார். மிட்சல் ஜான்சன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அரை சதம் கடந்த மிட்சல் மார்ஷ் 60 ரன்களில் வெளியேறினார். 

ஹாடின் (9) நிலைக்கவில்லை. கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய பால்க்னர் அரை சதம் எட்டினார். ஆஸ்திரேலிய அணி 50 ஓவரில் 8 விக்கெ்டடுக்கு 278 ரன்கள் எடுத்தது. பால்க்னர் (50), ஸ்டார்க் (0) அவுட்டாகாமல் இருந்தனர். 


ஜான்சன் அசத்தல்:

இங்கிலாந்து அணிக்கு இயான் பெல் (8) ஏமாற்றினார். ஜான்சன் ‘வேகத்தில்’ ஜேம்ஸ் டெய்லர் (4), மார்கன் (0) அடுத்தடுத்து சிக்கினர். மொயீன் அலி (26), ஜோ‌ ரூட்  (25) வெகுநேரம் நிலைக்கவில்லை. 

மேக்ஸ்வெல் ‘சுழலில்’ பட்லர்(17),  வோக்ஸ் (0) ஆட்டமிழந்தனர். பிராட் 24 ரன்கள் எடுத்தார். பின் வந்தவர்களும் சொதப்ப, இங்கிலாந்து அணி 39.1 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல்–அவுட்டாகி தோல்வியடைந்தது. 

ஆண்டர்சன் (5) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலிய அணி சார்பில் மேக்ஸ்வெல் 4, ஜான்சன் 3 விக்கெட் வீழ்த்தினர். 

0 comments:

Post a Comment