இம்ரான் சொன்னார் - அக்ரம் செய்தார்

உலக கோப்பை தொடரில்(1992) சிறப்பாக  வியூகம் அமைத்தார் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான். 

இதன் பைனலில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணிக்கு இம்ரான் (72), மியாண்தத்(58), இன்சமாம்(42), அக்ரம்(33) கைகொடுத்தனர். 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தது.      

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி திணறல் துவக்கம் கண்டது. அக்ரம் ‘வேகத்தில்’ நட்சத்திர வீரரான இயான் போத்தம் ‘டக்’ அவுட்டானார். ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து தத்தளித்தது. 

இந்த நேரத்தில் ஆலன் லாம்ப், நீல் பேர்பிரதர் இணைந்து துணிச்சலாக போராடினர். இவர்கள் 5வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்க்க, இம்ரான் மனதில் லேசான கலக்கம் ஏற்பட்டது. 

உடனே அக்ரமை அழைத்து,‘‘எனக்கு எப்படியாவது விக்கெட் வேண்டும். ‘வைடு’ அல்லது ‘நோ-பால்’ பற்றி எல்லாம் கவலைப்படாமல் பந்துவீசு,’’என, கட்டளை பிறப்பித்தார்.       

கேப்டன் உத்தரவை அப்படியே செயல்படுத்திய அக்ரம், ஆலன் லாம்ப்பை போல்டாக்கினார். அடுத்து வந்த கிறிஸ் லீவிசையும் தனது ‘யார்க்கரில்’ வெளியேற்றி, போட்டியில் திருப்புமுனை ஏற்படுத்தினார். 

இங்கிலாந்து அணி 49.2 ஓவரில் 227 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அணி, உலக கோப்பையை வென்றது. ஆட்ட நாயகன் விருதை அக்ரம் தட்டிச் சென்றார். 

0 comments:

Post a Comment