தென் ஆப்ரிக்க அணிக்கு அபராதம்

இந்தியாவுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில், ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசிய தென் ஆப்ரிக்க அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மெல்போர்னில் நடந்த ‘பி’ பிரிவு உலக கோப்பை லீக் போட்டியில், தென் ஆப்ரிக்க அணி 130 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. 

இப்போட்டியில் தென் ஆப்ரிக்க அணி ஒரு ஓவர் தாமதமாக பந்துவீசியது.

ஐ.சி.சி., விதிமுறைப்படி போட்டியில் தாமதமாக பந்துவீசுவது குற்றமாகும். 

இதனையடுத்து ஐ.சி.சி., ‘மேட்ச் ரெப்ரி’ ஜெப் குரோவ், தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்சுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம், மற்ற வீரர்களுக்கு 10 சதவீதம் அபராதம் விதித்தார். 

உலக கோப்பை பைனலுக்கு முன், மீண்டும் ஒரு முறை தென் ஆப்ரிக்க அணி தாமதமாக பந்துவீசும் பட்சத்தில், கேப்டன் டிவிலியர்சுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment