மீண்டும் மகுடம் சூடுமா இந்தியா ? கபில் தேவ் கணிப்பு

உலக கோப்பை தொடரில் 99 சதவீதம் இந்திய அணி கோப்பை வெல்லும் என, இதயம் கூறினாலும், 25 சதவீதம் தான் வாய்ப்புள்ளது என, மூளை சொல்கிறது,’’ என, கபில்தேவ் தெரிவித்தார்.     
        
கடந்த 1983 தொடரில் அசத்தி, இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை வென்று தந்தவர் கேப்டன் கபில்தேவ். இதன் பின் 28 ஆண்டுகள் கழித்து தான், தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் ஆனது. 

தற்போது ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை தக்கவைக்குமா என்பது குறித்து கபில்தேவ் கூறியது: வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதா என, கேட்கும் போது, இதயம் உணர்ச்சி வசப்பட்டு 99 சதவீதம் வாய்ப்புள்ளது என்று தான் கூறுகிறது. 

அதேநேரம், எனது கிரிக்கெட் மூளையை பயன்படுத்தி யோசித்துப் பார்த்தால், 25 சதவீத வாய்ப்பு இருப்பதாகத் தான் தெரிகிறது.         
    
சமீபத்திய போட்டிகளில் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என, எல்லோரும் கூறுகின்றனர். ஒருவேளை வெற்றிப் பாதைக்கு திரும்பி விட்டால், அப்புறம் ஏன் கோப்பை வெல்லக் கூடாது என, எனது கிரிக்கெட் மூளை நினைக்கிறது. ஏனெனில், நமது அணியில் இளம் வீரர்கள் அதிகம் உள்ளனர். பலமுறை இவர்கள் திறமையை வெளிப்படுத்தினர்.  
           
அனுபவ கேப்டன்: தவிர, அனுபவ கேப்டன் தோனி மற்றும் 6 பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களது நாளாக அன்றைய தினம் அமைந்து விட்டால், தனி நபராக போராடி அணியை வெற்றி பெறச் செய்வர். மற்றபடி, முதல் லீக் போட்டியில் (பிப்., 15) இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்த வேண்டும். பின் அரையிறுதிக்கு முன்னேறுவது முக்கியம். 

0 comments:

Post a Comment