தோனிக்கு எதிரான வழக்கு - உச்சநீதிமன்றம் தடை

கேப்டன் தோனிக்கு எதிரான வழக்கை விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்திய ஒருநாள், ‘டுவென்டி–20’ அணி கேப்டன் தோனி, 34. கடந்த 2013ல் வெளியான ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்தில் விஷ்ணு போல சித்தரிக்கப்பட்டு இருந்தார். 

இவரது கைகளில் ‘ஷூ’ உட்பட பல விளம்பர பொருட்கள் இருந்தது சர்ச்சையை கிளப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சமூகநல ஆர்வலர் ஜெயக்குமார், கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், தோனிக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதனிடையே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என, தோனி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் பினாகி சந்திரபோஸ், என்.வி.ரமணா அடங்கிய ‘பென்ச்’, தோனிக்கு எதிரான வழக்கை விசாரிக்ககூடாது என தடை விதித்து கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

0 comments:

Post a Comment